மடாலயங்கள்

இந்து தேச சரித்திரத்தில் அரசாங்கங்களை விட மடாலயங்கள் மேலான ஸ்தானம் வகித்து வந்திருக்கின்றன. துறவியின் முன்னிலையில் வேந்தனும் துரும்புபோன்று அடங்கி ஒடுங்கி இருந்து வந்தது தேச லட்சியத்தைத் தெளிவுறுத்துகிறது. மன்னர்களின் வைபவங்கள் தத்தம் மாகாணங்களோடு நின்று விட்டன. பரதகண்டம் முழுதும் ஒரே ஆட்சியின் கீழ் இருந்தது ஏதோ சில காலங்களிலேதான். ஆனால் சமய ஆசாரியர் அநேகரது தெய்வீக ஆதிக்கம் தேசமெங்கும் எக்காலத்திலும் பரவி வந்திருக்கிறது. சமுதாய வளர்ச்சிக்கும் தேச முன்னேற்றத்துக்கும் இன்றியமையாத நன்னெறிகள் யாண்டும் மடாலயங்களினின்று உபதேசித் தருளப்பட்டன. பண்டைக்காலம் தொடங்கி இப்புண்ணிய ஸ்தாபனங்கள் ஆற்றியிருக்கும் அரும்பணிகளை நீக்கிவிட்டால் பரதநாட்டில் பண்பு ஒன்றும் இல்லாது போய்விடும்.

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு