வைகோ பேச்சு

முதுகுளத்தூர், ஆக. 17-

ராமநாதபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயல் வீரர் கூட்டம் முதுகுளத்தூர் தேவர் மகாலில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் கராத்தே பழனிசாமி முன்னிலை வகித் தார்.

கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது:-

இலங்கையில் தமிழர்களை அடியோடு அழித்து விட வேண்டும் என்று இனவெறி யோடு சிங்கள ராணுவத்தினர் தாக்கி வருகின்றனர். எனவே எந்த சூழ்நிலையிலும் சிங்கள ராணுவத்துக்கு இந்தியா உதவக் கூடாது என்று பிரதமர் மன்மோகன்சிங்கை கேட்டுக் கொள்கிறேன். அப்படி உதவி னால் கிராமம், கிராமமாக சென்று ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டுவேன்.

ம.தி.மு.க.வை சேர்ந்த 4 எம்.பி.க்களுக்கும் சேர்த்து மத்திய மந்திரி பதவியை வாங்கிய கருணாநிதி ம.தி.மு.க.வை அழிக்க நினைக்கிறார்.

பா.ம.க., காங்கிரஸ், கம்ïனிஸ்டு கட்சிகள் என யார் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தாலும் விமர்சிக்காத கருணாநிதி, ம.தி.மு.க. கூட்டணி வைத்தால் மட்டும் பணம் வாங்கி விட்டதாக கூறி வருகிறார். எந்த சூழ்நிலையிலும் ம.தி.மு.க. நிலைத்து நிற்கும்.

ம.தி.மு.க. திட்டமிட்டு தொடங்கப்பட்ட இயக்கம் அல்ல. ஆனால் கடந்த 1993-ம் ஆண்டு முதல் கட்டுப்பாடான இளைஞர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சாதி, மத மோதல்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க நமது இளைஞர்கள் பாடுபட வேண்டும்.

இவ்வாறு வைகோ பேசினார்.

ஏன் கொடுக்கக் கூடாது நம்மிடம் உள்ள இத்துப்போன துப்பாக்கி வெடிக்காத குண்டுகளை கொடுத்து காசு சம்பாதிக்க வேண்டியது தானே.

நீண்ட நாள் முடிந்து

ஒன்றுமில்லை சும்மா தானுங்க இங்கே நான்